உள்நாடு

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை வழங்கும்

(UTV | கொழும்பு) – இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் வியாழக்கிழமை (23) கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்தார்.

வெளியுறவுச் செயலாளருடன் இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். வி. ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் (Indian Ocean Region (IOR)) இணைச் செயலாளர் கார்த்திக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே வழங்கப்பட்ட எரிபொருள், மருந்து, உரம் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளை மதிப்பாய்வு செய்த பிரதிநிதிகள், இலங்கைக்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தனர்.

நாட்டுக்கு வழங்கிய உதவிகளுக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்திருந்தார்.

Related posts

கல்வி அமைச்சரின் நம்பிக்கை

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

editor

2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

editor