அரசியல்உள்நாடு

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிகள் – டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர கடிதம்

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என பொருளாதார அபிவிருத்தி விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது,இன்று அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக நிலுவையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர் கடந்த ஐந்து வருட தரவுகள் அமெரிக்காவுடனான வர்த்தக நிலுவை அதிகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளன,என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

“போலி ஆவணம் மூலம் பாராளுமன்றிற்கு வந்த வெளிநாட்டு பெண்” நடவடிக்கை அவசியம் – முஜீபுர் ரஹ்மான்

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor

இன்றும் நாளையும் 4 மணித்தியால மின்வெட்டு