சூடான செய்திகள் 1

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியனகே நியமனம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக கடமையாற்றி வந்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை அடுத்து, மேல் மாகாண மற்றும் புத்தளம் மாவட்ட இராணுவ, விமானப்படை, கடற்படை, பொலிஸ் பிரிவுகள் யாவும் கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

ஆளுங் கட்சியுடன் இணைந்துக் கொண்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்