உள்நாடு

இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே

(UTV | கொழும்பு) –   இலங்கை இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு அமைய, இலங்கை இராணுவ படைகளின் 59 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே இன்று (07) முதல் கடமைகளை முன்னெடுக்கவுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, முன்னதாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பதவி வகித்திருந்தார்.

இலங்கை இராணுவப் படைகளின் 58 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து அப்பதவிக்கு மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம் – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்

editor

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!