உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு 177 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி உயர்வு வழங்கவுள்ளார்.

இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

5 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாகவும், பிரிகேடியர்களாக 4 பேரும் லெப்டினன் கேர்னலாக 39 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேஜர்களாக 69 இராணுவ அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை

‘சூரியவெவயில் ஊட்டச்சத்து குறைபாடு கணக்கெடுப்பு பொய்’  

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்