சூடான செய்திகள் 1

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது நீடிப்பு

(UTV|COLOMBO) இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது மேலும் ஒரு கிழமை நீடிக்கப்பட்டுள்ளதுடன். இராணுவ படையினர் சட்டபூர்வமாக விலகுவதை நோக்காக் கொண்டே இப் பொது மன்னிபபு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய வேளை தமக்குறிய தலைமையக சேவைக்கு சமூகமளிக்க தவறிய படையினருக்கு 17ஆம் திகதி மே 2019 அன்று மாலை 06.00 மணி வரையிலான கால பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருந்துப் பொருட்கள் உபகரணங்களின் விலைகள் விரைவில் குறைப்பு

பிணையில் விடுவிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரதன தேரர்

editor

ஊழியர்களது விடுமுறைகள் இரத்து