உள்நாடு

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் ஆறு அடிக்கு திறந்துவிப்பட்ட நிலையில் வினாடிக்கு மொத்தம் 8,352 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அந்த திணைக்களம் கூறுகிறது.

இதேவேளை அங்கமுவ குளத்தின் இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடிக்கு திறந்துவிடப்பட்டு வினாடிக்கு 2,994 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நேற்று நடவடிக்கை எடுத்தது.

மழைக்காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி – தவிசாளர் வினோராஜ்

editor

மிரட்டி பணம் பறிக்கும் மோசடி – நான்கு தொலைபேசி இலக்கங்களை வெளியிட்ட பொலிஸார்

editor

தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்த சம்பந்தன் – மாவை, சுமந்திரனிடம் வெளிப்படுத்தினார்