உள்நாடுசூடான செய்திகள் 1

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

(UTVNEWS | RATNAPURA) –இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரில் உள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

துப்பாக்கிச் சூட்டு வழக்கு: நீதிபதி இளஞ்செழியன் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தில்

தீ விபத்தில் 24 வீடுகள் முற்றாக தீக்கிரை