உள்நாடு

இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் – ருஹுனு பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் புள்ளிகள் வழங்கப்பட்டமை தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக மோதல் வெடித்த நிலையில் அது பின்னர் தீர்க்கப்பட்டது.

இருப்பினும், இன்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதால் சுமார் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.

Related posts

வெள்ளியன்று 10 கட்சிகளும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கு வரும்

அம்பு எய்தல் போட்டியில் வெற்றி பெற்றவரை ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன சந்தித்தார்

editor

11 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

editor