அரசியல்உள்நாடு

இம்முறை பாராளுமன்றம் செல்லும் 21 பெண்கள்

இம்முறை பொதுத் தேர்தலில் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கலாநிதி ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசிங்க, ஹேமாலி சுஜீவா, நிலந்தி கோட்டஹச்சி, ஒஷானி உமங்கா, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹசாரா லியனகே, சரோஜா சரோஜா பொல்ராஜ், முத்து ரத்வத்த, கீதா ஹேரத், ஹிருணி விஜேசிங்க, அம்பிகா சாமுவேல், சத்துரி கங்கானி, நிலுஷா கமகே, சாகரிகா அதாவுத, தீப்தி வாசலகே ஆகிய பெண்கள் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் சமிந்த்ரானி கிரியெல்ல ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

editor

ரணிலின் கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறிய பசில்

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்