உள்நாடு

இன்றைய வானிலை

(UTV | கொழும்பு) – இன்றைய வானிலை 

மழையின் விபரம்…...

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதி மாலை வரை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் படிப்படியாக தெற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி 2023 பெப்ரவரி 01 ஆம் தேதி முற்பகல் இலங்கைக் கரையைக் கடக்கக்கூடும்.

நாட்டில், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இது தவிர பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும். வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகம்……

கிழக்கு, ஊவா, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– வளிமண்டலவியல் திணைக்களம்-

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

📌 LIVE UPDATE || வரவு-செலவுத்திட்ட உரை – 2024

பாலஸ்தீன ஆதரவு – இலங்கை கால்பந்து வீரருக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம்!

editor

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – பணத்திற்கு பதிலாக போதைப்பொருள் – வௌியான அதிர்ச்சித் தகவல்கள்!

editor