உள்நாடு

இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை

(UTV|கொழும்பு ) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

நாளையிலிருந்து மழை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

editor

கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் – அச்சத்தில் மக்கள்.