சூடான செய்திகள் 1

இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் முற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிலாப மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில், அதன் தவிசாளர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற  உறுப்பினர்களான டளஸ் அலகப்பெரும ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதன்போது அரசியல் கூட்டணி மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நாலக டி சில்வா எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு

கொழும்புக்கு விரைவில் இலகு ரயில் சேவை