உள்நாடு

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு

(UTV | கொழும்பு) –  இன்று முதல் மீண்டும் சந்தையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் கணித்துள்ளது.

கெரவலப்பிட்டி தல்தியவத்தை கடல் எல்லையில் 7 நாட்களாக நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கான பணம் நேற்று செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதுடன், கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.

Related posts

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்த அரசு தீர்மானம்

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது