உள்நாடு

இன்று முதல் அதிக வெப்பநிலை பதிவாகும்

(UTV|கொழும்பு) – சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இன்று தொடக்கம் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று(28) யாழ்ப்பாண மாவட்டத்தின் கரம்பன், கொக்குவில் மற்றும் சரசாலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

editor

பொத்துவில் கல்வி வலய விவகாரம் – உதுமாலெப்பை எம்.பியின் அறிக்கையை மறுக்கிறார் ஆதம்பாவா எம்.பி

editor