அரசியல்உள்நாடு

இன்று பாராளுமன்ற விசேட அமர்வு

இன்றையதினம் (30) விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

அண்மையில் (20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஜூன் 30ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11ஆவது பிரிவுக்கு அமைய அரசாங்கத்தினால் நிதி செயல்நுணுக்கக் கூற்று (fiscal strategy statement) ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16இற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் பாராளுமன்றம் இன்று (30) மு.ப 9.30 மணிக்கு கூட்டப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 4.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஜூலை மாதம் 8, 9, 11ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தைக் கூட்டுவது பற்றிய தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 08
ஜூலை மாதம் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2437/04 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஜூலை 09
ஜூலை 09ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப.10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப. 10.30 மணிமுதல் மு.ப.11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஜூலை 10
எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி எசல பௌர்ணமி தினத்தில் பாராளுமன்றம் கூடாது.

ஜூலை 11
ஜூலை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சியினால் கொண்டுவரப்படும் தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவினால் கொண்டுவரப்படும் கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை செய்வதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிவினால் கொண்டுவரப்படும் இலங்கை வெளிநாட்டு சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனியார் உறுப்பினர் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் கொண்டுவரப்படும் இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் இனால் கொண்டுவரப்படும் அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் தொடர்பான தனியார் உறுப்பினர் பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே.ஜயசுதந்தரவினால் கொண்டுவரப்படும் பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நரங்கள் அமைந்துள்ள சூழல் கட்டமைப்பை சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்தல் தொடர்பான தனியார் உறுப்பினர் பிரேரணை என்பனவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts

586 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

வாக்குறுதியளிக்கப்பட்ட உர மானியத்தையும், 33% மின்சாரக் கட்டணக் குறைப்பையும் அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கடந்த 24 மணிநேரத்தில் 139 பேர் கைது