உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் தபால் துறையில் முறையான ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை, தற்போதைய ஊழியர்கள் மீது அதிக வேலைப்பளு மற்றும் மேலதிக நேரப் பணி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Related posts

சில அடுக்குமாடி குடியிருப்புக்கள் விடுவிப்பு

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!

IMF ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!