உள்நாடு

இன்று எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் திருத்தம்!

தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை, பெப்ரவரி (29) நள்ளிரவில் எண்ணெய் விலை திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதிலும், மார்ச் முதல் வாரத்தில் எண்ணெய் விலை திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர

ஸ்ரீ.சு.கட்சியின் 8 எம்பிக்கள் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்

பெரியநீலாவணைப் பகுதிகளில் அதிகரிக்கும் மணல் கடத்தல் சம்பவங்கள்!