உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று இரவு பொரளையில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் வைத்தியசாலையில்

பொரளை – சஹஸ்புர பகுதியில் இன்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி56 ரக துப்பாக்கியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மின்சார திருத்த சட்டமூலம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் அறிவித்தார்

editor

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரை தாக்கிய நபர் கைது

editor

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்