உள்நாடு

இன்றும் 20 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் அலுவலக ரயில்கள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்கள் கடமைக்கு அறிக்கையிடவில்லை என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதன் காரணமாக, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் அலுவலக ரயில்கள் உட்பட, ஏனைய பல ரயில்சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது

நேவி சம்பதிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

இந்தியா சென்றார் ஜனாதிபதி : ஜனாதிபதி செயலாளாரக சந்தானி -அமைச்சர்கள் நியமனம்