உள்நாடு

இன்றும் சுமார் 4 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் றுவரையான வலையங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.

அதேநேரம், கொழும்பின் முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது.

இதுதவிர, MNOXYZ ஆகிய வலையங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுலாவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பொருளாதார நெருக்கடியான காலத்திலும் ரணில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினார் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

editor

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது

ராஜபக்சர்களுக்கு நான் எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல – ஜனாதிபதி ரணில்