உள்நாடு

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.

நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு Diamond Excellence விருது

editor

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் – 20 பேர் கைது

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று – சபையில் ஆரம்பம்.