உள்நாடு

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதோடு, அதன் எண்ணிக்கை 1,576 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து 491 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 558 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 95 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் 22 அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அதிவேக வீதிகளில் மீண்டும் களமிறக்கப்படும் STF

editor

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

editor

06 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு