அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது – நீதியான விசாரணை வேண்டும் – நாமல் எம்.பி

இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளதாக நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் மரணம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தில் கூட தவறான ஆதாரங்களை உருவாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (01) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

சம்பவம் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் எனவும்.

அத செய்யப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைக்கிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்  

கொவிட் -19 தடுப்பூசி : 67,615 பேருக்கு சைனோபாம் செலுத்தப்பட்டுள்ளது

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு தனியான சேவைப் பிராமணக் குறிப்பு அறிமுகம்

editor