விளையாட்டு

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண்

(UTV |  புதுடெல்லி) – ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை. அந்த தொடரிலும் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றினார். ராகுல் டிராவிட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டால், ஆசிய கோப்பை தொடரில் அணியுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பையில் இந்திய அணி வரும் 28ம் திகதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு-உயிர்தப்பியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி (PHOTOS)

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு

ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்கப்படும்…