உள்நாடு

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்களை, நாளை(23) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரும், நேபாளம்- காத்மண்டுவில் இருந்து 93 பேரும் நாளை மறுதினம் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]