உலகம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா

(UTV | இந்தியா) – இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

நிவாரண பொருட்களுடன் காசா நோக்கி சென்ற படகு தடுத்து நிறுத்தம் – கிரெட்டா தன்பெர்க் குழுவை கைது செய்த இஸ்ரேல்

editor

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

மியன்மாரில் ஒரே நாளில்  114 பேர் சுட்டுக் கொலை