உள்நாடு

இந்தியாவின் தலையீட்டால் ஆறு வருடங்களாக முடியவில்லை

(UTV | கொழும்பு) –  ஆறு வருடங்களாக தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக்கான நாடுகளின் (சார்க்) மாநாட்டை நடத்த முடியாமல் போயுள்ளதாக வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதியாக சார்க் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“.. பிராந்திய நாடுகளில் ஒரு நாட்டின் எதிர்ப்பு காரணமாகவே சார்க் மாநாட்டை நடத்த முடியவில்லை. அந்த நாடு இந்தியா.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையில் நிலவி வரும் மோதலான நிலைமையே இதற்குக் காரணம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் அரசியலில் தன்னையும் ஒருவராக நிரூபித்த மயோன் முஸ்தபா அவர்களின் இழப்பு கவலையளிக்கிறது ! – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

editor

அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்