வணிகம்

இந்தியாவிடம் கடனுதவி கேட்கும் இலங்கை

(UTV | இந்தியா) – இலங்கை கோரியுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தியா – இலங்கை இடையிலான எட்கா உடன்படிக்கை சம்பந்தமாக 11 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சீனாவிற்கு சொந்தமான சில நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

மெனிங் மரக்கறி சந்தை நாளை திறப்பு

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மொபைல் பணமாற்ற சேவையை அறிமுகம்