உள்நாடு

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இத்தாலியில் இருந்து மேலும் 116 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இத்தாலியின் மிலான் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1208 ரக விசேட விமானத்தில் இவர்கள் நேற்றுப் பிற்பகல் 1.25 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பீ.சீ.ஆர் பரிசோதனை கூடத்தில் இவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் இவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றனர்.

Related posts

ஆனைவிழுந்தான் சம்பவம் – கைதியின் விளக்கமறியல் நீடிப்பு [UPDATE]

சஜித் தனித்து செல்ல விரும்பினாலும் நாம் இணைந்து பயணிப்பதற்கே விரும்புகின்றோம் – நவீன் திஸாநாயக்க

editor

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேர் – பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்பு

editor