உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரையில் 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் 02 பேரினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2080 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1955 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் [VIDEO]

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor

பயணிகளுடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டத்தை செயற்படுத்திய Kangaroo Cabs

editor