உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

(UTV | கொழும்பு) – அரச செலவுகள் உள்ளடங்கிய இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை(27) மற்றும் நாளை மறுதினம் (28) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 950 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டு பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த மதிப்பீட்டை நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21ம் திகதி முன்வைத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ளது. எனவே எதிர்வரும் மாதங்களுக்கான அரச செலவீனத்தை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 949.736 ருபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து அரிசி வகைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை

editor

சோதனை நடவடிக்கையில் மீட்கப்படும் வாள்கள்,ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் 

வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் – இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

editor