சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவுகின்ற போதிலும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.!  -ரிஷாத் பதியுதீன்