வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் – பலர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்செஸ்டரில் உள்ள மண்டபம் ஒன்றில், பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சி ஒன்று இடம்பெற்று நிறைவடைந்தப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குண்டுவெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் இதனைத் தீவிரவாத் தாக்குதலாக கருதுவதாக இங்கிலாந்தின் வடமேற்கு தீவிரவாத முறியடிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ot-video][/ot-video]

[ot-video][/ot-video]

Related posts

ஏமனில் நடாத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 15 பேர் பலி

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு