உலகம்

ஆஸ்திரியா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி நேற்று (10) காலை 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

அது ஓர் உயர்நிலைப் பாடசாலை எனத் தெரிகிறது. திடீரென்று பாடசாலையின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சிதறி ஓடினர். சில மணித்துளிகள் களவரத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

பாடசாலையில் உள்ள கழிவறைகளில் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

அவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு கிராஸ் நகர மேயர் எல்கே கார் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலையி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு மோசமான துயரம் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தரப்பில், “சம்பவப் பகுதி முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பாடசாலையில் இருந்து அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டோம்.

உயிரிழந்தோர், காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சம்பவம் நடந்த பகுதியில் மேலும் அபாயகரமான சூழல் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஜூன் 20இல், கிராஸ் நகரில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அதன் 10ஆவது ஆண்டு நினைவு நாள் வரவிருக்கும் நிலையில், கிராஸ் நகரில் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி, இரவு 12.15 மணியளவில் கிராஸ் நகரின் மையப் பகுதியில் ஆலன் ரிஸ்வானிக் என்ற 26 வயது இளைஞர் தனது காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 43 பேர் காயமடைந்தனர்.

மேலும் காரில் இருந்து இறங்கிவந்து பாதசாரிகள் இருவர், சைக்கிளில் சென்ற ஒருவர் என மூன்று பேரை கத்தியால் குத்திக் கொன்றார். அவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான பின்னர் அவர் பொலிஸிடம், “நான் துருக்கியர்களால் துன்புறுத்தப்பட்டதாக உணர்கிறேன்” என்று மட்டும் கூறியிருந்தார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மதவாத, இனவாத வெறுப்பு, சித்தாந்தங்கள் ஏதுமில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர், போஸ்னியா போரில் இருந்து தப்பித்து அகதியாக ஆஸ்திரியா வந்தவர்.

2023 செப்டம்பரில் அவர் சிறையில் இருந்தபோது உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோருக்கு பிடிவிராந்து

editor

ஐக்கிய அரபு இராச்சியத்தில், முதலாது MokeyPox அடையாளம்

27 இந்திய மீனவர்களை விடுதலை செய்யகே கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!