அரசியல்உள்நாடு

ஆழ்கடல் மீனவர்களிடம் கொள்ளை – அறிக்கை வழங்கினார் ஆதம்பாவா எம்.பி

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை கையளித்து, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர ஆகியோரைச் சந்தித்து அது தொடர்பாக திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் மற்றும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான ஏ. ஆதம்பாவா நேற்று முன்தினம் (21) புதன்கிழமை கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் என்றும் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவும் கலந்து சிறப்பித்தார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Related posts

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா