உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து கொண்ட கும்பல் ஒன்று இவ்வாறு செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையைக் கட்டுப்படுத்த மதுரங்குளிய பொலிஸார் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

 இன்று பெட்ரோலிய கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி!

அரசாங்கத்துக்கு எதிரான நாளைய போராட்டத்துக்கு எதிர்க்கட்சி முஸ்தீபு