உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து கொண்ட கும்பல் ஒன்று இவ்வாறு செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையைக் கட்டுப்படுத்த மதுரங்குளிய பொலிஸார் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மு.கா.வின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அநுரவுக்கு ஆதரவு.

editor

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

editor

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

editor