உள்நாடுபிராந்தியம்

ஆயுதமேந்திய குழுவொன்று பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இன்று (04) ஆயுதமேந்திய குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

களுத்துறை, நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதமேந்திய பத்து பேர் கொண்ட குழு அந்தப் பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததால் ஆத்திரமடைந்த குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

Related posts

கைத்தொழில் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு – சாணக்கியன் எம்.பி

editor

மூன்று மாகாணங்களில் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம் [UPDATE]