உள்நாடுபிராந்தியம்

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி – இருவர் கைது.

காங்கேயனோடை, மட்டக்களப்பு வைத்தியசாலை பஸ் சேவை மீள ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ் எம்.பி. கோரிக்கை

editor

மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறவுங்கள் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வேண்டுகோள்.

editor