உள்நாடு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 36 மணிநேரத்தில் வடக்கு கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 590 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புங்குடுதீவு கடற் பகுதியில் சுமார் 300 கிலோகிராம் கேரள கஞ்சாவும், மாதகல் கடற் பகுதியில் 191 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், மைலிட்டி கடற் பகுதியில் 99 கிலோகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா : 342 பேர் அடையாளம்