அரசியல்உள்நாடு

ஆசிரியர்களாக பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக சஜித் பிரேமதாச மீண்டும் குரல் எழுப்பினார்

ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு மோதல்களை விடுத்து, பதில்களும் தீர்வுகளுமே தேவையாக காணப்படுகின்றன.

பல ஆண்டுகளாக, நமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி சிறந்த சேவைகளை ஆற்றினர்.

இவர்களுக்கு வழங்க வேண்டிய தீர்வு குறித்து நீதிமன்றத்தில் மத்தியஸ்த தீர்ப்பு எட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் படி, 3 ஆண்டுகளுக்குள் பட்டபின் டிப்ளோமாவை தொடரும் வரை, தரம் 2.2 பயிலுநர் ஆசிரியர்களாக இவர்களை உள்வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், இன்று அது நடக்கவில்லை.

தேர்தல் காலங்களில் வந்து எம்மத்தியில் பல வாக்குறுதிகளை வழங்குவது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்கா என்று இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று கேள்வி எழுப்புகின்றனர்.

இவர்களுக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்க வேண்டும். ஆசிரியர் வெற்றிடங்கள் இல்லை என்று அரசாங்கத்தால் கூற முடியாது. சுமார் 35,000 பட்டதாரி வெற்றிடங்கள் உட்பட சுமார் 50,000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக் கொள்ளக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக 28 நாட்களுக்கும் மேலாக முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்ட இடத்திற்கு இன்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் செய்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல வருடங்களாக அர்ப்பணிப்போடு பணியாற்றிய இவர்களை, ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குப் பிறகு ஓரங்கட்டப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அரசாங்கத்திற்கு மனச்சாட்சி இல்லையா என்று கேள்வி எழுப்புகிறோம்.

இந்த 16,600 பேரின் பிரச்சினையை தீர்க்குமாறும், மேலும் குழுக்களை நியமிக்க வேண்டியதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

மற்றுமொரு அரச தொலைகாட்சி – வானொலி சேவைகள் முடக்கம்

ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தம்

editor

சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பொய் – ஹர்ஷ டி சில்வா

editor