வகைப்படுத்தப்படாத

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி ஜயந்திநகர் இந்து வித்தியாலய ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை அறுவரையும் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 7 ஆம் திகதி வரை யாழ் சிறுவர் இல்லத்தில் தொடர்ந்து தங்கவைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதவான் ஏ ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி குறித்த ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தலை மற்றும் கைப்பகுதிகளில் காயமுற்ற ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதனை தொடர்ந்து,

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் அறுவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை தொடர்ந்தும் தங்கவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் – அரசாங்கம் முற்றாக மறுப்பு

பிரதமர் மோடியின் உலங்கு வானூர்தி காரணமாக ஹட்டனில் 3 வீடுகள் கடும் சேதம்!

கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்தேன் – மஹிந்த