அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கம் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டது.
இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.