அரசியல்

அலி சப்ரி ரஹீம் MP யை உடனடியாக கைது செய்ய உத்தரவு.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்தபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கு முன்னரும், பொறுப்புவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்துக்குள் நுழைந்தமை, சொத்துக்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

Related posts

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

editor

வேட்பாளர் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

editor

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

editor