அரசியல்உள்நாடு

அறநெறி பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கவனம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

நாட்டில் பல்வேறுபட்ட குற்ற செயல்கள் உட்பட தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

மற்றும் உயிரை மாய்த்துக் கொள்கிறனர் இதற்கு எல்லாம் காரணம் அறநெறி இன்மையே என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் முதல் முறையாக நடாத்தப்பட்டுவரும் இரத்தினபுரி மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வதிவிட ஆன்மீக பயிற்சி பட்டறை யின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) பலாங்கொடை இந்து கல்லூரியில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் முதல் முறையாக நடாத்தப்படும் இரத்தினபுரி மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வதிவிட ஆன்மீக பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை(23) ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை(25) நிறைவடைய உள்ளது.

மேற்படி கருத்தரங்கில் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்,

பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் பாடசாலை கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைபோல் சமய கலாசார விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒரு மனிதன் சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ்வதற்கு அறநெறி முக்கியமாகும்.

எனவே அந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாகத் தான் இன்று நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையில் அறநெறி வகுப்பு இடம்பெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வரும் அறநெறி வகுப்புக்களுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

இவ்வாறு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் மாணவர்கள் நாட்டில் ஒரு சிறந்த பிரஜையாக உருவாக முடியும்.

இன்று பெருந்தோட்ட உட் கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் பாடசாலைகளை கட்டிக் கொடுக்கலாம் காணிகளை பெற்றுக் கொடுக்கலாம் ஆனால் சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்குவது என்பது ஆசிரியர்களின் கைகளில் தான் தங்கி உள்ளது.

எனவே நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் கைகளிலே உள்ளது.

அறநெறி பாடசாலைகளுக்கு நாங்கள் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல பொய்யான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமயங்களுக்கு எதிரானது என்றும் பல போலியான தகவல்களை வெயிட்டு இருந்தார்கள்.

எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமயத்திற்கு எதிரான அரசாங்கம் அல்ல.

இன்று ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் அதிகாரிகள் வரை சமயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றார்கள்.

இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்களம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு பல்வேறுபட்ட முன்னுரிமைகளை வழங்கி வருகின்றது.

குறிப்பாக தேசிய மகா சிவராத்திரி விழா இரத்தினபுரி மாவட்டத்திலே நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அறநெறி பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் முக்கிய கவணம் செலுத்தி வருவகின்றது.

அத்துடன் ஆலய புனர் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவிகளை பெற்று கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அறநெறி பாடசாலைகள் மூலம் சமுதாயத்தில் மாணவர்களை நல்வழிக்கு கொண்டுவர முடியும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஸ்பகுமார, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி மற்றும் விரிவுரையாளர்கள், அரச அதிகாரிகள் அறநெறி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

மீண்டும் மின் தடை?

editor

முஸ்லிம் மத்ரஸாவை சீரமைக்க வேண்டிய கட்டாயம்: அரச அங்கீகாரமும் உடைய வேறான சபையொன்று தேவை

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor