அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்திய மூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனார்.

Related posts

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

ஜனாதிபதி ரணிலின் சத்தியப்பிரமாணம் பாராளுமன்றத்தில்..