அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்திய மூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனார்.

Related posts

மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படவுள்ள மெனிங் சந்தை

முகக்கவசங்களுக்கான அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி வௌியானது

நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்!