உள்நாடுவணிகம்

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தையில் அரிசியின் விலை தற்போது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் அதிகரித்து காணப்படுகின்றது.

அனைத்து விதமான அரிசி வகைகளும் 100 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனையாகிறது.

இந்நிலையில், அரிசி விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம, பொலன்னறுவையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு!

ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்

editor

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்