சூடான செய்திகள் 1

அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிபுறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் இன்று(27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 15,000க்கும் அதிகமானவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் இணையவுள்ளதாக, அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவின் செயலாளர் உதயசிறி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

சப்ரகமுக பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு சவுதி அரசாங்கத்தின் உதவி

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!