உள்நாடு

அரசியல் பழிவாங்கல் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- 2015 முதல் 2019 நவம்பர் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பாணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரியுமான ஷானி அபேசேகர, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோரை, அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ்.திசேரவையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்ற சட்டத்தினை அரசாங்கம் படித்துப் பார்க்க வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor