உள்நாடு

அரசியல் அடக்குமுறை தொடர்பான குழு அறிக்கை பிரதமருக்கு

(UTV | கொழும்பு) – நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியல் துன்புறுத்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் அரை அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவினால் அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, வி.கே.சோக்ஸி பிசி, கணக்காளர் கே.எஸ். சந்திரபால டி சில்வா மற்றும் ஓய்வுபெற்ற அரச கணக்காளர் எச்.டி.வீரசிறி. குழு செயலாளராக பிரதமர் அலுவலகத்தின் சட்ட இயக்குனர் வழக்கறிஞர் தக்ஷிதா தேவபுரா ஆகியோர் உள்ளடங்குவர்.

Related posts

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

1600 ஆக அதிகரித்த பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

editor

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து